விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் வாலாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் உள்ள வன்னிமரத்து விநாயகர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 24ம் தேதி காலை 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 6:00 மணிக்கு இரண்டாம்கால வேள்வி, காலை 7:30 மணிக்கு வேள்வி நிறைவு மற்றும் காலை 8:00 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச் சாலையிலிருந்து புறப்படுதல் நடந்தது. தொடர்ந்து, காலை 8:15 மணிக்கு வன்னிமர விநாயகர் மற்றும் காலை 8:45 மணிக்கு அர்த்தநாரீஸ்வர் சுவாமிகளுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வேலாயுதம், ராமலிங்கம், அம்மையப்பா கண்ஸ்ட்ரக் ஷன் வெங்கடேசன், ஓய்வுபெற்ற காவலர் சண்முகம், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.