பதிவு செய்த நாள்
29
ஆக
2018
12:08
திருவண்ணாமலை: வரும், 1ல், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கம் சார்பில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 கிலோ நகை வழங்கப்பட உள்ளது. தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கம் சார்பில், தலைவர் தில்லை பாஸ்கர் தலைமையில், வரும், 1ல், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 கிலோ தங்கத்தில், அருணாசலேஸ்வரருக்கு, சிவ செண்பக ஆரம், உண்ணாமுலையம்மனுக்கு, அருணவில்வ ஆரம் ஆகியவை கோவில் நிர்வாகத்தில் வழங்கப்பட உள்ளது. இதில், சிவ செண்பக ஆரத்தின், செயின் போன்ற சரத்தில், பச்சைக்கல் பொறித்தும், ஆரத்தின் டாலரின் நடுவில் வட்ட வடிவ பச்சைக்கல் பொருத்தியும், அதன் மேல் பகுதியில், சிவலிங்கம் உருவம் பொறித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அருண வில்வ ஆரத்தில், சரம் போன்ற, மூன்று வில்வ இலை வடிவிலும், இலை காம்பில், சிவ சிவ என்றும், டாலரில் வட்ட வடிவ சூரியன் பொறிக்கப்பட்டுள்ளது. வரும், 1ல், மாட வீதியில் ஊர்வலமாக கொண்டு வந்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளனர். வரும், 2ல், திருக்கழுகுன்றம் தாமோதரன் தலைமையில், கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடக்கிறது.