திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் ஆலயத்தில், சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம் நடந்தது. ராகவேந்திரர் ஆலயத்தில், சுவாமிகளின் ஆராதனை விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு‚ நிர்மால்ய அபிஷேகம், 8:30 மணிக்கு‚ ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், அரிவாயுஸ்துதி பாராயணம் நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு‚ ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு பஞ்சாமிருத அபிஷேகம், வெள்ளிகவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு‚ ஸ்வஸ்தி வாகனம், மங்கள ஆரத்தியும், 7:00 மணிக்கு பரதநாட்டியம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகி கோபி மற்றும் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்தார்.