பதிவு செய்த நாள்
30
ஆக
2018
01:08
விழுப்புரம்: விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை யொட்டி, நேற்று காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை ேஹாமம், தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை, சந்திரசேகர சிவச்சாரியார், ரமஷே், நடராஜன் குருக்கள் ஆகியோர் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வழக்கறிஞர் செந்தில், இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் சரவணன், அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா, ஆலய அறங்காவலர்கள் மோகன், குமார், நிர்வாகிகள் தெய்வ கருணாகரன், பால்ராஜ், சுந்தர்ராஜன், கோவிந்தராஜ், ராஜேந்திரன், ரமஷே், ஆனந்த், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.