திருவண்ணாமலை: கிணறு துார்வாரும் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை குறித்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.திருவண்ணாமலை அடுத்த, வாணியந்தாலில், ஊர் பொதுக் கிணற்றில் துார்வாரும் பணி நேற்று நடந்தது. அப்போது, வலது கை, இரண்டு கால்கள் உடைந்த நிலையில், ஒரு அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.திருவண்ணாமலை தாசில்தார் மனோகரன் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள், சிலையை எடுத்து சென்றனர். கோவிலில் இருந்து, சிலை திருடப்பட்டதா அல்லது சேதமானதால் சிலை வீசப்பட்டதா என்பது குறித்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.