பழநி: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.பழநி முருகன் கோயிலைச் சார்ந்த, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா ஆக.,22ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.,01 வரை நடக்கிறது. ஆக.,28ல் திருக்கல்யாணம் நடந்தது.முக்கிய நிகழ்வாக நேற்று காலையில் திருத்தேரோட்டம் நடந்தது. நாளை இரவு சேஷவாகனத்தில் பெருமாள் உலாவருகிறார், கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் செந்தில்குமார் செய்தனர்.