நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் காலனியில் உள்ள விநாயகர், பாலமுருகன், அய்யனராப்பன், முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம், கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும், மதியம் 3 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர், ராட்டினம், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.