பதிவு செய்த நாள்
01
செப்
2018
12:09
உடுமலை: உடுமலை, அருள்நிறை அற்புத அன்னை ஆலய தேர்த்திருவிழா, நாளை துவங்கி, வரும் 9 வரை நடக்கிறது. உடுமலை, அருள்நிறை அற்புத அன்னை ஆலய தேர்த்திருவிழா, நாளை, திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, தினமும், மாலை, 6:00க்கு, திருப்பலி, திருச்சுரூப பவனி, பல்வேறு தலைப்புகளில் மறையுரை கருத்து நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 9ம் தேதி, காலை, 6:00க்கு, திருவிழா திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, மின் அலங்காரத்தேர் பவனி, மாலை, 7:00 மணிக்கு நடக்கிறது.