அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி பக்கத்தில் உள்ளது பாறைகுளம் வெள்ளியம்பல நாதர் கோயில். இது நுாற்றாண்டு புகழ் வாய்ந்தது. கடந்த 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, திருவண்ணாமலை போன்று, திருச்சுழி பூமிநாதர் கோயிலை சுற்றி அஷ்டலிங்கத்தை பிரதிஷ்டை செய்து முனிவர்கள் வழிபட்டுள்ளனர் என்பது வரலாறு. அதில் பிரதிஷ்டை செய்த முதல் கோயில் வெள்ளியம்பல நாதர் கோயில். இங்கு மகா ருத்ர பூஜை நடந்தது. பத்தாயிரம் ருத்ராட்சம் கொண்டு செய்யப்பட்ட சிவலிங்க கவசம் சாமிக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட அனைத்து சிவனடியார்களுக்கும் ருத்ராட்சம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார் ராஜபாண்டி தலைமையில் குழுவினர் செய்தனர்.