Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் தீர்த்தத்தில் ... கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 செப்
2018
12:09

திண்டுக்கல்:கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.திண்டுக்கல் மேட்டுராசப்பட்டி கிருஷ்ணன் கோயிலில் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், ஆறு கால பூஜைகள் நடந்தது.

பழநி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பழநி முருகன்கோயில் உபகோயிலான காந்திரோடு வேணுகோபால பெருமாள் கோயிலில் பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களில் பெருமாளுக்கு அபிஷேகமும், கிருஷ்ணர் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பொரி, அவுல், வெண்ணெய், லட்டு நைவேத்யம் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சிறுவர்,சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு, கோயிலை வலம் வந்து, கோலாட்டம், கும்மியடித்து, பெருமாளை வழிபட்டனர். இதேப்போல அகோபில பெருமாள்கோயில், லட்சுமிநாராயணப் பெருமாள்கோயில் பெருமாள் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

-நத்தம்:கோவில்பட்டியில் பாமாருக்மணி சமேத வேணுகோபால சாமி மற்றும் கோபால்பட்டி கிருஷ்ணன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் துளிசி மாலை அணிவித்து தரிசனம் செய்தனர்.

* செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு பாலாபிேஷகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ ஆராதனையில், சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

*கோபால்பட்டி, அருகே வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் மண்டபத்தில் சொற்பொழிவு, பஜனை நடந்தது. மாலையில் பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நரசிம்மன், ராஜசிம்மன் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சின்னாளபட்டி: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவர் ராமருக்கு, வேணுகோபாலசுவாமி அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar