உத்தரகோசமங்கை: ஏர்வாடி அருகே கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை 4:00 மணியளவில் சுதர்ஸன ஹோமம் செய்யப்பட்டு காலை 11:00 மணியளவில் விநாயகர் கோயிலில் இருந்து 108 பால்குடம் ஏந்திய பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வீதியுலா வந்தனர். சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு 11:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 12.01 மணிக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 11:00 மணிக்கு கயிறு இழுக்கும் போட்டி, பகல் 12:00 மணிக்கு 20 அடி உயரமுள்ள வழுக்குமரத்தில் ஏறும் போட்டி, உறியடி உற்ஸவம், மாலையில் தேரோட்டமும் நடக்கும்.