பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
நாமக்கல்: நாமக்கல்லில், ஆவணி கிருத்திகை நாள் விழா கொண்டாட்டம், முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று ஆவணி கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு கணபதி பூஜை, சுப்ரமணிய ?ஹாமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. 11:00 மணிக்கு மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட, 32 நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், தங்கக்கவசம் சாத்தப்பட்டு, பல்வேறு மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு பாலதண்டாயுதபாணி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.அதே போல் நாமக்கல் கடைவீதி, சக்தி கணபதி கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.