பதிவு செய்த நாள்
05
செப்
2018
12:09
கூடலூர்: கூடலூரின் பல்வேறு பகுதிகளிலும், கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பள்ளி தாளாளர் நடராஜ் தலைமை வகித்தார். ஊர்வலத்தை சிவன்மலை கிரிவல கமிட்டி தலைவர் கேசவன் துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில், மாணவ மாணவியர் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். ஊர்வலம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, தேவர்சோலை வழியாக சென்று, பள்ளியில் நிறைவு பெற்றது. முன்னதாக, தேவர்சோலை சாலையில் உள்ள விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.பள்ளியில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், பி.டி.ஏ., தலைவர் உண்ணிகிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* கூடலூர் மங்குழி பகவதி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகளுக்கு பின், துவங்கிய கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம், விநாயகர் கோவில் வரை சென்று திரும்பியது. இதேபோல, பாடந்துறை சுண்டவயல் பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், துவங்கிய கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் பாடந்துறை மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.
* மண்வயல் மாதேஸ்வரர் கோவிலில் துவங்கிய கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம், மண்வயல் வழியாக வந்து புத்தூர்வயல் கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
* தேவர்சோலை எட்டாவது மைல் முருகன் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம், முக்கிய நகர் வழியாக தேவர்சாலை சிவன் கோவிலில் நிறைவு பெற்றது.