பதிவு செய்த நாள்
05
செப்
2018
12:09
ஈரோடு: விநாயகர் சிலைகளை கரைக்க, ஏழு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விதிமுறை களின்படி, சிலை அமைப்பு முதல், கரைப்பு வரை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அதிகாரி தெரிவி த்துள்ளார்.
இதுபற்றி, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அமைக்கப்படும் சிலைகள், சுற்றுச்சூழல் துறை விதிகளின்படி, களிமண், மரவள்ளி கிழங்கு, காகிதக்கூழ் ஆகியவற்றில் செய்திருக்க வேண்டும். நீரில் கரையும் தன்மையுள்ள வர்ணங்களை பூச வேண்டும். பெயின்ட், ரசாயன கலவை, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தக்கூடாது. தற்போது, சிலைகள் செய்யும் இடங்களில் ஆய்வு செய்கிறோம். முரண்பாடுகள் தெரிய வந்தால், சிலைகளை அகற்றுகிறோம். தற்போது, அனைத்து நீர் நிலைகளிலும், தண்ணீர் அதிகம் செல்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏழு இடங்கள் வரை, சிலைகளை கரைக்க தேர்வு செய்துள்ளனர். அவ்விடங்களில், சிலைகளை கரைக்கும் முன்னும், கரைக்கும் போதும், கரைத்த பின்னரும் நீரின் மாதிரியை எடுத்து, வேதி பொருட்களின் அளவை கணக்கிடுவோம். கரைக்கப்பட்ட திடப்பொருட்களை, நீர் நிலைகளில் இருந்து அகற்றிவிட்டார்களா, என்பதையும் கண்காணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.