ஆத்தூர், திருவிழி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2018 12:09
ஆத்தூர்: ஆத்தூர், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவிலுள்ள, திருவிழி அம்மன் கோவிலில், உலக நன்மை, மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி, திருவிளக்கு பூஜை, நேற்று நடந்தது. அதில், 108 பெண்கள், விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.