பதிவு செய்த நாள்
05
செப்
2018
12:09
விழுப்புரம்:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழாவை முன்னி ட்டு, பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சம்பந்தமான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் சுப்ரமணியன் பேசுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் தற்காலிக பஸ் நிலையங்கள், கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பஸ்களை இயக்க அறிவுறுத்தபட்டுள்ளது. பஸ்கள் ஒரே இடத்தில் நிறுத்துவதை காவல் துறை, இந்து அறநிலைய துறை, போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதி செய்து கொள்ள வேண்டும். முழு சுகாதார திட்டத்தின் மூலம்பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்திட வேண்டும்.
மின் வாரியம் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழா தருணமானஇரு நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும்.
இந்து சமய அறநிலைய துறை மூலம் கோவிலின் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா க்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல்
நிலையங்களில் சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்கபட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்தி கேயன், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ் உட்பட பி.டி.ஓ.,க்கள், காவல் துறை, போக்குவரத்து, தீயணைப்பு உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.