பதிவு செய்த நாள்
06
செப்
2018
12:09
உடுமலை:பெரிய கோவில்களில், அதிகளவு பெறப்படும் பொருட்களை சிறு கோவில் களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும், என கிராம கோவில் பூஜாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக கிராம கோவில் பூஜாரிகள், அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பிய மனு: தமிழகத்தில்அறநிலையத் துறையில் கட்டுப்பாட்டில், ஏறத்தாழ, 3 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தீபம் ஏற்றுதல் மற்றும் நந்தா விளக்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு பெரிய கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்களிடமிருந்து எண்ணெய் காணிக்கையாக பெறப்படுகிறது. அதிகளவிலான எண்ணெய் பெறப்படும் கோவில்களி லிருந்து அவற்றை சுற்றுப்பகுதியில் உள்ள சிறு கோவில்கள், ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களுக்கு வழங்கி, அங்கு தீபம் ஏற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளலாம். பல்வேறு கோவில் களில் பரிவட்டம், சுவாமிக்கு பக்தர்கள் சாற்றும் உடைகள் ஆகியவற்றை, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கினால், முறையாக பயன்படுவதோடு, அவற்றை வழங்கும் பக்தர்களுக்கு புண்ணியம் சேர்ப்பதாகவும் இருக்கும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.