பதிவு செய்த நாள்
06
செப்
2018
02:09
திருவள்ளூர்:திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணர் சன்னதியில், ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர், பூங்கா நகரில் அமைந்துள்ள சிவ- - விஷ்ணு கோவிலில், நான்கு கரத்துடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அருள்கிற ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண
பெருமாளை, இக்கோவிலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். ஏகாதசியை முன்னிட்டு, நேற்று (செப்., 5ல்) காலை, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை, 8.30 மணிக்கு, சீனிவாசபெருமாளுக்கு அபிஷேகம், அதை தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு காலை, 9:30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.