ராமேஸ்வரத்தில் ஆவணி அமாவாசையை யொட்டி, நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2018 11:09
ராமேஸ்வரம்: ஆவணி அமா வாசையை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.
ஆவணி அமாவாசையான நேற்று ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி பக்தர்கள் புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்து, கடலில் மூழ்கி புனித நீராடினர்.
கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று (செப்.,9ல்) விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் குவிந்தனர். வாகனங்களை நிறுத்த, பக்தர்களை ஒழுங்குபடுத்த கூடுதல் போக்குவரத்து போலீசார் இல்லாததால், ராமேஸ் வரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.