தேவிபட்டினத்தில் நவபாஷாணம் வரும் பக்தர்களின் வருகை குறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2018 12:09
தேவிபட்டினம்: தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக நவபாஷாணம் வரும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணத்தில் முன்னோர்களுக்கு தர்பணம், ஏவல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளிட்டவைகளுக்கு நிவர்த்தி வேண்டியும் இங்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்து வருவதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியதுவம் வாய்ந்த இந்த நவபாஷாணத்திற்கு கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் வெயில் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்படுகிறது.