பதிவு செய்த நாள்
10
செப்
2018
12:09
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை யையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நேற்று (செப்.,9ல்) அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் (செப்.,8ல்) இரவு முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக் காக, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆனைமலை கோவிலுக்கு, சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், அம்பராம்பாளையம் ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மக்கள் திரண்டனர். ஆழியாறு அணையில் திடீரென உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் திதி கொடுக்க முடியாமல் சிலர் சிரமத்திற்கு உள்ளாகினர்.