பதிவு செய்த நாள்
10
செப்
2018
12:09
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், 10 நாட்களில், பக்தர்கள் உண்டியலில், 70.16 லட்சம் ரூபாய் ரொக்கம், 385 கிராம் தங்கம் செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்தனர்.
உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை காணிக்கையாகச் செலுத் தினர்.தொடர்ந்து, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் முன்னிலையில், நேற்று (செப்., 9ல்) காலை, உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணினர்.இதில், 10 நாட்களில், 70 லட்சத்து, 16 ஆயிரத்து, 854 ரூபாய் ரொக்கம், 385 கிராம் தங்கம், 3,845 கிராம் வெள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.