பதிவு செய்த நாள்
11
செப்
2018
12:09
திருப்பாச்சூர்;திருப்பாச்சூர் பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.வரும், 13ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது. இதற்காக, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
திருவள்ளூர் - கடம்பத்தூர் நெடுஞ்சாலையில், திருப்பாச்சூர் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.இங்கு செய்யப்படும் சிலைகள், 2,000 - 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன. இதை, பொதுமக்கள் ஏராளமானோர், விலை பேசி வாங்கிச் செல்கின்றனர்.
இங்கு, 3 அடி முதல், 20 அடி வரை, சிலைகள் பல்வேறு வண்ணங்களில் உள்ளன. இதை, திருவள்ளூர், கடம்பத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.