பதிவு செய்த நாள்
11
செப்
2018
12:09
காஞ்சிபுரம்: தேசிபாளையம் தெரு, செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நாளை (செப்., 12ல்) நடைபெறுகிறது.காஞ்சிபுரம், தேசிபாளையம் தெருவில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது.
சிறிய அளவில் இருந்த கோவிலை, பெரிய அளவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, கோவில் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று (செப்., 10ல்) காலை, 9:00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.
இன்று (செப்., 11ல்) காலை, 10:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை, 5:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், விக்ரகங்களுக்கு அஷ்டபந்தனம் சமர்ப்பணமும் நடக்கிறது.
கும்பாபிஷேக தினமான நாளை (செப்., 12ல்) காலை, 9:00 மணிக்கு, யாகசாலை பூஜை, மஹா சங்கல்பம், தீபாராதனை கலசம் புறப்பாடு நடைபெறுகிறது.தொடர்ந்து, செல்வ விநாயகர், வலம்புரிவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்க்கை அம்மன், தட்ஷிணா மூர்த்தி ஆகிய மூர்த்தங்களுக்கும், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை, தேசிபாளையம் தெருவிழாக் குழுவினர்மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.