பதிவு செய்த நாள்
12
செப்
2018
11:09
திருவாரூர்: திருவாரூர் அடுத்த, விளமல் பதஞ்சலி மனோகர் கோவில் மகாகும்பாபிஷேகம், இன்று (செப்., 12ல்), கோலாகலமாக நடந்தது. திருவாரூர் அடுத்த, விளமலில், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோவில் உள்ளது. கடந்த, 2004ல், இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், கடந்த சில மாதங்களுக்கு முன், திருப்பணிகள் துவங்கின. திருப்பணிகள் முடிந்து, கடந்த, 6ம்தேதி அனுக்ஞை, விக்னே ஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
கடந்த, 9ம்தேதி மாலை,6:30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. அன்று முதல், தொடர்ந்து, ஆறுகால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை,6:00 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 7:10 மணிக்கு மூலவர், அம்பாள் கோபுரம் மற்றும் விமானம், நடராஜர், விநாயகர், மகாலட்சுமி, சுப்ரமணியர், பைரவர்,சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.