பதிவு செய்த நாள்
12
செப்
2018
12:09
மாமல்லபுரம்:மாமல்லபுரம், பாரம்பரிய சின்ன கடற்கரைக் கோவில் வளாக பாதுகாப்பிற்கு, கடற்காற்றால் துருப்பிடிக்காத, உலோகக் கம்பி தடுப்பு அமைக்கப்படுகிறது.
பல்லவ சிற்பக்கலை சின்னங்களுக்கு புகழ்பெற்ற மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரியக் கலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. கடற்கரை கற்கோவில், ஒரே பாறையில் செதுக்கப்பட்ட, பாண்டவ ரதங்கள், அர்ச்சுணன் தபசு, குடைவரை மண்டபங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
கடற்கரைக்கோவில் உள்ளிட்ட பாரம்பரியச் சின்ன வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள, கம்பி வேலித் தடுப்பு சீரழிந்து, இவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.பாரம்பரியச் சின்ன பாது காப்பு கருதி, வளாகத்தைச் சுற்றிலும், சில அடி உயர சுவர், அதில் குறிப்பிட்ட உயர கம்பிவேலி தடுப்பு என, பல ஆண்டுகளுக்கு முன், தொல்லியல் துறை அமைத்தது.
கம்பித்தடுப்பில், வர்ணம் தீட்டி பராமரித்தாலும், கடலோர பகுதி என்பதால், துருப்பிடித்து சீரழிகிறது.இதையடுத்து, மின்சார, மொபைல் போன் கோபுரங்கள் அமைக்க பயன்படுத்தும் தரமிக்க, துருப்பிடிக்காத உலோகத் தடுப்பு அமைக்க முடிவெடுத்தது.
இத்தடுப்பு, குறிப்பிட்ட நீள, அகல, உயர அளவிலும், கூர்முனையுடனும், சென்னையில் தயாரிக்கப்பட்டது.தற்போது, மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டு, கோவிலைச் சுற்றி, 600 மீ., சுற்றளவிற்கு, இத்தடுப்பு அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:மூன்றாண்டுகளுக்கு முன் அமைக்கப் பட்ட, கம்பித் தடுப்பு, கடற்காற்றால் துருப்பிடித்து பெயர்ந்தது. தற்போது, நவீனமாக அமைக்கி றோம். ஐ.ஐ.டி., பரிசோதனையின்படி, குறைந்தபட்சம், 10 - 15 ஆண்டுகள், இக்கம்பிகள் துருப் பிடிக்காமல் நிலைத்திருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.