பதிவு செய்த நாள்
12
செப்
2018
12:09
மாடம்பாக்கம்:மாடம்பாக்கம், மதுரா நூத்தஞ்சேரியில் உள்ள, தேவி கருமாரி அம்மன் கோவி லின், விநாயகர் சன்னதிக்கு, நாளை, (செப்., 13ல்)கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தாம்பரம் அடுத்த, மாடம்பாக்கம் அருகே உள்ள, மதுரா நூத்தஞ்சேரி கிராமத்தில் உள்ள, தேவி கருமாரி அம்மன் கோவிலில், நூதன ஜோதி வலம்புரி விநாயகர் சன்னதி, புதிதாக நிறுவப் பட்டது. இதையொட்டி, இன்று (செப்.,12ல்) மாலை, விநாயகர் பூஜை, கலச பிரதிஷ்டை பூஜை ஆகியவை நடக்க உள்ளன.
நாளை (செப்.,13ல்) அதிகாலை, விநாயகர் சன்னதிக்கு கும்பாபி ஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, அம்மனுக்கு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டி தலைவர், கோவிந்தன், துணை தலைவர் தேவேந்திரன், செயலர் மணி ஆகியோர் செய்து வருகின்றனர்.