பதிவு செய்த நாள்
12
செப்
2018
12:09
கிருஷ்ணராயபுரம்: விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், பல வண்ண விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில், விநாயகர் சிலைகளை களிமண்ணில் செய்து, விற்றுவருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் தற்போது, திருச்சியிலிருந்து, பல வண்ண விநாயகர் சிலைகளை வாங்கி வந்து, விற்பனைக்கு வைத்துள்ளனர். ஒரு சிலை குறைந்தபட்சம், 1,500 ரூபாய் முதல், அதிகபட்சம், 4,000 ரூபாய் முதல் குறைந்தபட்சம், 1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது என, சிலை விற்பனையாளர்கள் கூறினர்.