பதிவு செய்த நாள்
12
செப்
2018
01:09
தர்மபுரி: நீர் மாசுபடுவதை தடுக்க, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் வைத்து வழிபட்டு, கரைக்க வேண்டும், என்று, டி.எஸ்.பி., காந்தி பேசினார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை வைப்பவர்களுக்கு, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் தடையில்லா சான்று வழங்கப்பட்டது. அப்போது, தர்மபுரி டி.எஸ்.பி., பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, 13ம் தேதி அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் சிலைகள் வைக்க வேண்டும். சிலை, 10 அடிக்குள் இருக்க வேண்டும். இதனருகே, விழாக் குழுவினர் குறைந்தது, இருவர் இருக்க வேண்டும். 15ம் தேதி சிலைகளை கரைக்க எடுத்து செல்ல வேண்டும். உடன், சிறுவர்களை அழைத்து செல்வது, நீச்சல் தெரியாதவர்களை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். சிலைகள் களிமண்ணால் ஆனதாகவும், இயற்கை வர்ணங்கள் பூசப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், எஸ்.ஐ.,க்கள் சுந்திரம், கிருஷ்ணவேணி, வட்ட எழுத்தர் வனிதா ஆகியோர் உடனிருந்தனர்.