பதிவு செய்த நாள்
13
செப்
2018
12:09
வெள்ளலுார்: வெள்ளலுார், வெள்ளாளபாளையத்திலுள்ள கொண்டத்து மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழா, 8ம் தேதி காலை பிரவேச பலி, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், தன பூஜை நடந்தன. நேற்று முன்தினம் மாலை மகா பூர்ணாஹுதி, பிரசாதம் வழங்குதல், மாகாளியம்மனுக்கு யந்திர பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று அதிகாலை, நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம் உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கும், அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் உள்ளிட்டவை நடந்தன. விழாவில் திரளானோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.