Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னையில் களை கட்டியது விநாயகர் ... அவ்வை அகவல் பாடிய பெரியாணைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு அவ்வை அகவல் பாடிய பெரியாணைக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமர சுயம்பு விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2018
12:09

காஞ்சிபுரம்: கூடுவாஞ்சேரி மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில், இன்று, சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, பல  ஆண்டுகளுக்கு முன், பெரிய மாந்தோப்பு இருந்தது. அங்குள்ள மரத்தின் அடியில், சுயம்புவாக விநாயகர் தோன்றினார். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, விநாயகரை வழிபாடு செய்ய  துவங்கினர்.தொடர்ந்து, கூடுவாஞ்சேரி என்.ஜி.ஓ., காலனி, ரயில்வே காலனி பகுதியில், மாமர சுயம்பு சித்தி விநாயகர் மற்றும் லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர் கோவிலை கட்டினர். இதன்  திருப்பணிகளை, கிருபானந்த வாரியார் துவக்கி வைத்தார்.இங்கு, ஆண்டு தோறும், விநாயகர் சதுர்த்தி பெருவிழா நடைபெறுகிறது. இன்று காலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன், விநாயகர் சதுர்த்தி  கொண்டாடப்படுகிறது. சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.காலை, 11:00 மணிக்கு, 1,008 மோதக நாம அர்ச்சனையும், மாலை, 4:00 மணிக்கு, உற்சவ மூர்த்திக்கு, மோதக அர்ச்சனையும்  நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் சாற்றப்படுகிறது.தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் மற்றும் முக்கிய பிரமுகர்கள், இவ்விழாவில்  பங்கேற்கின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் சீனுவாசன், முத்துக்குமார சிவாச்சாரியார் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar