அவ்வை அகவல் பாடிய பெரியாணைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2018 10:09
திருக்கோவிலுார்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ அவ்வையார் அகவல் பாடிய பெரியானைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகரை அவ்வையார் வணங்கி கொண்டிருந்தபோ-து சுந்தரரும், சேரமான் பெருமானும் முக்தி பெறுவதற்காக வேகமாக கைலாயம் சென்று கொண்டிருந்தனர். இதனை கண்ட அவ்வையார் ‘சீதக்களப செந்தாமரைப் பூம்’ என இங்குள்ள விநாயகரை வேகமாக பூஜை செய்தார். விநாயகர் தனது துதிக்கையால் சுந்தரர், சேரமான் பெருமானுக்கு முன்னதாக கைலாயம் கொண்டு சேர்த்தார். சிறப்பு மிக்க அவ்வை அகவல் பாடிய, பெரியானைக் கணபதிக்கு‚ காலை 10:30 மணிக்கு யாகசாலை பூஜை‚ மதியம் 12:00 மணிக்கு‚ சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு பெரியானைக்கணபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவமூர்த்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வானவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது.