பதிவு செய்த நாள்
14
செப்
2018
11:09
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம்முழுவதும் கோவில்களிலும், இந்து இயக்கங்கள் சார்பிலும், விநாயகர் சதுர்த்தி விழா, பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.மூலப்பரம்பொருளாகிய விநாயகர் சதுர்த்தி, திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப் பகுதிகளில் உள்ள, விநாயகர் கோவில்களில், அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகளுடன் நடந்தது. அருகம்புல், மலர் மாலைகள், வெள்ளெருக்கு மாலை அணிவித்து, சிறப்பு அலங்கார பூஜையும், அகவல் வழிபாடும் நடந்தது.
ஆண்டிபாளையம் நவகிரஹ ரத்ன விநாயகர் கோவிலில், அதிகாலையில், 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள், அவல்பொரி, மோதகம், கொழுக் கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து, வழிபட்டனர்.
திருப்பூர் குலாலர் பிள்ளையார் கோவிலில், சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.டவுன் ஹால் செல்வ விநாயகர் கோவிலில், கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (செப்., 12ல்) வெண்ணெய் காப்பிலும், நேற்று (செப்.,13ல்) சந்தன காப்பு அலங்காரத்திலும், விநாயகர் அருள்பாலித்தார். ஸ்ரீராஜ விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரபூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பிச்சம்பாளையம் புதூர் கற்பக விநாயகர் கோவில் உட்பட, விநாயகர் கோவில்கள் அனைத் திலும், அபிஷேக பூஜை, சிறப்பு ஹோமம், அலங்கார பூஜை, அன்னதானம் என, சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில், விநாயகர் கோவில்களில் வழிபாடு நடத்திய பிறகே, வீடுகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது.