பதிவு செய்த நாள்
14
செப்
2018
04:09
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,200 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்திருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்து விழா நேற்று (செப்.,13ல்) விமரிசையாக நடந்தது. வீடுகள் மற்றும் முக்கிய சாலை, தெரு சந்திப்புகளில், விதவிதமான விநாயகர் சிலைகளை, பக்தர்கள் வைத்து வழிபாடுகளை நடத்தினர்.ஒரு வாரம் இந்த விநாயகர் சிலைகளுக்கு தினமும், மூன்று வேளையும் பூஜை நடக்கும். அதன் பின், நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
மாவட்டத்தில், 1,200 சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகர் சன்னதியை அலங்கரித்துள்ளனர். இந்த கோவி லில் கடந்த ஆண்டை விட இரண்டு லட்சம் ரூபாய் கூடுதலாக அலங்காரத்திற்காக கொடுத்துள்ளதுள்ளனர்.
மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. சில கோவில்களில், உற்சவர் விநாயகர் வீதிவுலா நடைபெற்றது. நடப்பாண்டு விநாயகர் சிலை வைக்க போலீசார் கடும் நிபந்தனை விதித் திருந்தனர். இருந்தும் விழா அமைப்பாளர்கள் சிலைகள் வைத்துள்ளனர்.
இதன் படி, காஞ்சிபுரம் காவல் உட்கோட்டத்தில் மட்டும், 154 சிலைகளும், நகரில், 82 சிலைகள் உட்பட மொத்தம், 1,200 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.