Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலூர் குடியாத்தத்தில், பள்ளத்தில் ... பழநியில் கொங்குசேரர் காலத்து செம்பு நாணயம் கண்டுபிடிப்பு பழநியில் கொங்குசேரர் காலத்து செம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் வல்லப கணபதியாக ராஜகணபதி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
சேலத்தில் வல்லப கணபதியாக ராஜகணபதி அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

15 செப்
2018
11:09

சேலம்: வல்லப கணபதியாக, ராஜகணபதி காட்சியளித்தார். விநாயகர் சதுர்த்தி விழா, சேலம், தேர்வீதியிலுள்ள, ராஜகணபதி கோவிலில், நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை, 6:00 மணி முதல், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, இளநீர், தயிர் உள்ளிட்ட திரவியங்களால், அபி ?ஷகம் செய்யப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, வல்லப கணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமானோர், அருகம்புல், எருக்கமாலை வைத்து, சுவாமியை வழிபட்டனர். சிலர், சுண்டல், பொங்கலை, பக்தர்களுக்கு வழங்கினர்.

ரூபாய் நோட்டில்...: ஓமலூர் அருகே, பண்ணப்பட்டி பிரிவில், விநாயகர் நண்பர்கள் குழு சார்பில், 11ம் ஆண்டாக, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வருகின்றனர். அங்கு, யானை மீது நின்று, கையில் சக்கரத்தை ஏந்தியபடி, விநாயகர் உள்ளார். 10, 20, 50 ரூபாய் நோட்டுகளால், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மாலை அணிவித்து பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று மாலை, அன்னதானம் நடந்தது. இன்று காலை, ஊர்வலமாகச் சென்று, மேட்டூர், காவிரியில் கரைக்கவுள்ளனர்.

சந்தன காப்பு:
ஆத்தூர், ராணிப்பேட்டை சாலையில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 20 அடி உயரத்தில், ராஜ அலங்கார சிலை அமைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. நேற்று, மூலவர் விநாயகர், சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ராணிப்பேட்டை நண்பர்கள் குழு மற்றும் அ.ம.மு.க., சார்பில், மதியம், கோவில் முன்புற பகுதியில், 2,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வம், ஆத்தூர் மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஆத்தூர், வெள்ளை விநாயகர், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு, சிவகலா ?ஷத்ரா நாட்டியப்பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது.

192 சிலைகள் கரைப்பு: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள், நேற்று, விநாயகர் சிலைகளை, மினி ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம், கல்வடங்கம் காவிரியாற்றுக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து, பூஜை செய்து, சிலைகளை ஆற்றில் கரைத்தனர். நேற்று மாலை, 6:00 மணி வரை, கல்வடங்கம் ஆற்றில், 90 சிலைகள், பூலாம்பட்டி ஆற்றில், 102 சிலைகள் கரைக்கப்பட்டன. அசம்பாவிதத்தை தடுக்க, பல இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி, போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar