Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானிசாகரை அடுத்த, எரங்காட்டூரில் ... சேந்தமங்கலம் ஆண்டாள் சூடிய மாலை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் விநாயகர் சிலைகளை நாளைக்குள் (செப்.,16ல்) கரைக்க உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
02:09

ஓசூர்: ஓசூர் பகுதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை, நாளைக்குள் கரைக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளதால், இந்து அமைப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், விநாயகர் சதுர்த்தியின் போது, பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 10 நாட்கள் வரை பூஜை செய்து நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஆண்டுதோறும், பல்வேறு கெடுபிடிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் விதித்தாலும், சிலைகளை பூஜை செய்து கரைக்க வழங்கப்படும் நாட்கள் மட்டும்குறைக்கப் படுவதில்லை.

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஓசூர் உட்கோட்டத்தில் உரிய அனுமதி பெற்று, 534 சிலைகளும், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், 363 சிலைகளும் நேற்று முன்தினம் (செப்.,13ல்) பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவற்றை, 10 நாட்கள் வரை பூஜை செய்த பின் கரைக்க, பல்வேறு இந்து அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், ஐந்து நாட்களுக்குள் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மேற்கோள் காட்டி, ஓசூர், தேன்கனிக் கோட்டை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என, ஆர்.டி.ஓ., விமல்ராஜ் தலைமையில் நடந்த ஆலோசனையில் நேற்று (செப்., 14), முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதலில் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு, அதிருப்தியில் சென்றனர். ஓசூரில் நாளை (செப்., 16), தேன்கனிக் கோட்டை பகுதி யில் வரும், 17 ல் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்ற. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், ஓசூருக்கு பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar