பதிவு செய்த நாள்
15
செப்
2018
03:09
திருவள்ளூர்: திருவள்ளூரில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 250 விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் இன்று (செப்.,15ல்) கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், 1,100 சிலைகள் அமைக் கப்பட்டன. நாள் முழுவதும், விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
அன்றைய தினமே, 40 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இன்று (செப்.,15ல்), விநாயகர் சிலை கரைப்பு தினத்தின் முதல் நாள்.இதை முன்னிட்டு, திருவள்ளூர் நகர், ஆயில் மில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 50 சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு, காக்களூர் ஏரியில் கரைக்கப்பட உள்ளன. மேலும், 200 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.மீதம் உள்ள சிலைகள், பழவேற்காடு ஏரி, எண்ணுார், சென்னை வங்க கடலில், நாளை (செப்.,16ல்) கரைக்கப்பட உள்ளன. சிலை கரைப்பு ஊர்வலத்திற்கு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.