பதிவு செய்த நாள்
15
செப்
2018
03:09
ஆர்.கே.பேட்டை:சுந்தரராஜ பெருமாள் கோவிலில், பவித்ர உற்வசம் நேற்று செப்.,14ல் துவங்கியது. இன்றும் செப்.,15ல் தொடரும் உற்சவம், நாளை செப்.,16ல் நிறைவு பெறுகிறது.
ஆர்.கே.பேட்டை பிராமணர் வீதியில் அமைந்துள்ளது, விஜயவல்லி, சுந்தரவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில். கடந்த, 10 ஆண்டுகளாக, பவித்ர உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று செப்.,14ல் மாலை, மேதினி பூஜையுடன் உற்சவம் துவங்கியது. தொடர்ந்து, யாகசாலை வாஸ்து பூஜை நடந்தது.
இன்று செப்.,14ல் காலை, 6:00 மணிக்கு காலசந்தி பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ் சனமும் நடைபெறும். தொடர்ந்து, பவித்ர உற்சவம் நடக்கிறது.மாலை, 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு எழுந்தருளுகிறார். 6:00 மணிக்கு யாகசாலையில் திருவாராதனம், சாற்றுமறை செய்யப்படுகிறது.
நாளை செப்.,16ல் மாலை, 5:00 மணிக்கு, உற்சவர் உலாவை தொடர்ந்து, கும்ப புறப்பாடும், பத்ம பிரதக் ஷணமும் நடக்கிறது. ஷோபன அக் ஷதையுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.