Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா பாதுகை: திருப்பூர் ... புதுச்சேரி வலம்புரி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் புதுச்சேரி வலம்புரி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: தரிசனம் முடிந்ததும் திரும்பிவிட அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு: தரிசனம் முடிந்ததும் திரும்பிவிட அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள்

16 செப்
2018
12:09

சபரிமலை புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. உணவு, தண்ணீர் பிரச்னை உள்ளதால், தரிசனம் முடிந்ததும் ஊர் திரும்பிவிடுமாறு பக்தர்களுக்கு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. 55 நாட்கள் இடைவெளிக்கு பின்  சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து ஆழிகுண்டத்தில் தீ வளர்க்கப்படும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை  அதிகாலை 4.00 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும். 21-ம் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் படிபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகளை நடத்துவார்.

கட்டுப்பாடுகள்: பம்பை உருக்குலைந்து காணப்படுவதால் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதிக்கும் பாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். குடிநீர், உணவு எடுத்து செல்ல வேண்டும். சன்னிதானத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. தரிசனம்  முடிந்த உடன் ஊர் திரும்பிவிட வேண்டும்.பக்தர் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும். அங்கிருந்து கேரள அரசு பஸ்சில் சென்று திரும்ப வேண்டும்.பம்பையில் புலி மீது அமர்ந்த கோலத்தில் 28 அடி உயர ஐயப்பன் சிலை வைக்கப்பட உள்ளது. இதற்கு நேற்று  தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் அடிக்கல் நாட்டினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar