பதிவு செய்த நாள்
17
செப்
2018
03:09
காரைக்குடி: காரைக்குடியில் இந்து முன்னணி, பா.ஜ., சார்பிலான விநாயகர் சிலை விசர்ஜன விழா இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அக்னி பாலா தலைமையில் நடந்தது.
காசி விஸ்வநாதன், தாமரை சரவணன் முன்னிலை வகித்தனர். பா.ஜ., தேசிய செயலாளர் எச். ராஜா தொடங்கி வைத்தார். டி.டி.நகர், முத்துப் பட்டணம், செஞ்சை, பர்மாகாலனி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த 57 சிலைகள் ஊர்வலமக எடுத்து வரப்பட்டு, டி.டி. நகர் முதல் வீதியிலிருந்து புறப்பட்டது.
செக்காலை ரோடு, கல்லுக்கட்டி, வ.உ.சி., ரோடு வழியாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் பருப்பூரணியில் கரைக்கப்பட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் பொருளாளர் சந்திரசேகர், விஸ்வநாதகோபாலன், நகர தலைவர் சந்திரன், மாவட்ட துணை தலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
*சாக்கோட்டையில் நகரத்தார் மண்டபத்திலிருந்து பா.ஜ., ஒன்றிய தலைவர் சங்கர், சிதம்பரம் மற்றும் நென்மேனி தனபால் தலைமையிலான 27 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அக்னி பிள்ளையார் கோயில் ஊரணியில் கரைக்கப்பட்டது. டி.ஸ்.பி., கார்த்திகே
யன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இப்பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. செப்.,15ல் விநாயகர் ஊர்வலம் நடந்தது. சிங்கம்புணரி நகர், சுற்று வட்டார பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சீரணி அரங்கிற்கு எடுத்து வரப்பட்டன. அங்கு நடந்த விழாவிற்கு தடகள பயிற்சியாளர் சிங்கை மந்திரி தலைமை வகித்தார். சத்தியசீலன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திருமாறன் முன்னிலை வகித்தனர். பாரதிய மஸ்தூர் சங்க அமைப்பாளர் தங்கராஜ், இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிச்சாமி பேசினர்.
இரவு 8:30 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலை கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சேவுகப் பெருமாள் கோயில் தெப்பத்தை அடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டன.