பதிவு செய்த நாள்
04
பிப்
2012
10:02
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை :
இக்கோயிலில் பிப்.,20 இரவு முதல் பிப்.,21 அதிகாலை வரை மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. இத் தினத்தன்று, அம்மன், சுவாமி, உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக சாமான்களை கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். அபிஷேக பொருட் களான பால், தயிர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் உட்பட இதர அபிஷேக பொருட்களை, பிப்.,20 மாலை கோயில் உள்துறை அலுவலகத்தில் மக்கள் ஒப்படைக்கலாம், என தெரிவித்துள்ளார்.