நாகப்பட்டினம் - திருவாரூர் வழியில் உள்ள திருப்புகலூரில் கருந்தார்குழலி எனும் சூலிகாம்பாள் தன் பக்தையின் மகளுக்குப் பிரசவம் பார்த்ததாக தல வரலாறில் கூறப்பட்டுள்ளது. திருமண வரம் வேண்டும் கன்னிப்பெண்கள் இந்த அம்பிகைக்கு வெள்ளைப்புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடுகிறதாம்.