பதிவு செய்த நாள்
21
செப்
2018
12:09
திருப்பரங்குன்றம்;திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், ஹார்விபட்டி கோயில்களில் புரட்டாசி மாதம் நடக்கும் விழாக்கள். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக். 5ல் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா. அக். 10முதல் அக். 18 வரை கோயில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள விசாக கொறடு மண்படத்தில் தினம் ஒரு கொலு அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் அருள்பாலிப்பார்.
அக். 19 அன்று சுப்பிரமணிய சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கும். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் செப். 22 முதல் சனிக்கிழமை காலையில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு புஷ்பாங்கி அலங்காரம், மாலையில் உற்சவர்கள் ஊஞ்சல் சேவை. செப். 29, அக். 9ல் மூலவர்களுக்கு முத்தங்கி சேவை. மாலையில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம். அக். 13 நான்காவது சனிக்கிழமை காலையில் மூலவர்களுக்கு புஷ்பாங்கி சேவை, மாலையில் உற்சவர் கருட வாகனத்தில் வீதி உலா. அக். 19முதல் அக். 18 வரை ராஜராஜேஸ்வரி அம்மன் தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் அக். 10 முதல் அக். 1வரை தினம் ஒரு கொலு அலங்காரத்தில் புவனேஸ்வரி அம்பாள், ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் துர்க்கை அம்மன் தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலிப்பர். திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் செப். 21ல் மூலவருக்கு நவகலச அபிஷேகம். செப். 22ல் மூலவருக்கு திருப்பதி அலங்காரம். அக். 6ல் மூலவருக்கு தங்க கவசம் சாத்துப்படி. அக். 13ல் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா. அக். 10முதல் அக். 18 வரை கொலு அலங்காரம். அக். 19 அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும்.