திருப்பரங்குன்றம்;திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலை ஆய்வு செய்த நீதிபதிகள், லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க உத்தரவிட்டனர். உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக இக்கோயிலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஸிமா பானு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தனர். லட்சுமி தீர்த்த குளம், மண்டபங்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், யானை, இலவச மற்றும் கட்டணம் செலுத்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் பாதைகள், அன்னதானம் கூடம், பிரசாத ஸ்டாலை ஆய்வு செய்தனர்.
பின் நீதிபதிகள் கூறியதாவது: சுவாமி சிலைகள் பழுதில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். கோயில் துாய்மையாக உள்ளது. குடவரை கோயிலாக இருப்பதால் இரு வரிசையாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாற்று ஏற்பாடுகள் செய்ய வழி இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை. சுவாமி, மண்டபம் பெயர்களை ஆங்கிலத்தில் எழுத அறிவுறுத்தப்பட்டது என்றனர். துணை கமிஷனர் மாரிமுத்து, உதவி கோட்ட பொறியாளர் சிவமுருகானந்தம் உடன் சென்றனர்.