பதிவு செய்த நாள்
21
செப்
2018
12:09
சென்னை: பெருங்களத்துார், வேதாந்த தேசிக தர்ஸன சபாவின், சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று, சுவாமி தேசிகனின், 750வது திருநட்சத்திர மகோற்சவம்
கொண்டாடப்பட உள்ளது. சென்னையை அடுத்த பெருங்களத்துாரில், வேததாந்த தேசிக தர்ஸன சபா சார்பில், பத்மாவதி சமேத சீனிவாச பெருமாள் கோவில் ர்வகிக்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலில், சுவாமி தேசிகனுடைய, 750வது திருநட்சத்திர மகோற்சவம் இன்று நடைபெற உள்ளது.தேசிகனின் திருநட்சத்திர நாளான, இன்று காலை, 6:30 மணிக்கு மங்களாசாசனம், திவ்யதேச மரியாதை நடக்கிறது. அதை தொடர்ந்து, பல்லாக்கில், தேசிகன் மாட வீதி புறப்பாடு நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, விசஷே திருமஞ்சனம்; மாலை, 6:30 மணிக்கு சேவாகாலம், சாத்து மறை ஆகியவை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, தேசிகன் மாட வீதி புறப்பாடு நடக்கிறது. வேதாந்த தேசிக சபாவின், சீனிவாச பெருமாள் சன்னதியில், உலக நன்மைக்காக, அக்., 5 முதல், 7ம் தேதி வரை, லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. செப்., 5ம் தேதி காலை, 6:30 மணிக்கு மூலவர், உற்சவருக்கு, 108 கலச திருமஞ்சனம், வேதபாராயணத்துடன் துவங்குகிறது.இதற்கான ஏற்பாடுகளை, வேதாந்த தேசிக தர்சன சபாவினர் செய்து வருகின்றனர்.