Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் வளவனூர் ... பழநி கோவில்களை நிர்வகிக்க தனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒடிசா மாநிலம், புரியில் ஜகன்னாதர் கோவிலில் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
12:09

புரி: ஒடிசா மாநிலம், புரியில் உள்ள ஜகன்னாதர் கோவிலில், பூஜைகள் செய்யும் சேவையில், பரம்பரை பரம்பரையாக தொடர்வது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக, நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர், கோபால் சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தினார். முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ள, ஒடிசாவின் புரி நகரில் உள்ளது, ஜகன்னாதர் கோவில்.

நியமனம் : புகழ்பெற்ற இந்தக் கோவிலில், ஒரு சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களே, பரம் பரை பரம்பரையாக, பூஜைகள் செய்யும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், பக்தர்களிடம், பணத்தை அதிகமாக பறிப்பதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவிலில், 12 அம்ச திட்டங்களை செயல் படுத்தும் படி, ஜூலையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆராய்ந்து, கோவிலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, அமிகஸ் கியூரி எனப் படும் நீதிமன்றத்துக்கு உதவுபவராக, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை, உச்ச நீதிமன்றம் நியமித்தது.அதன்படி, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனைகளை நடத்தினார். இது குறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:கோவிலில் பூஜை செய்யும் சேவையில், பரம்பரை பரம்பரையாக ஈடுபடுவது தொடரலாம். ஆனால், தற்போது, அதிக எண்ணிக்கையில் பூசாரிகள் உள்ளனர்.
ஆலோசனை : அதனால், இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என, கோபால் சுப்பிரமணியம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவ்வாறு அதிகமாக உள்ளவர்களுக்கு இழப்பீடு அளிப்பது போன்ற திட்டங்களை செயல்படுத் தலாம் என, அவர் கூறியுள்ளார். விரைவில் அவர், தன் அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar