Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் 3 மணிநேரம் பக்தர்கள் ... கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குஜிலியம்பாறை அருகே ஜக்கம்மநாயக்கன்பட்டி திருவிழாவில் எருது விடும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
01:09

குஜிலியம்பாறை:குஜிலியம்பாறை அருகே ஜக்கம்மநாயக்கன்பட்டி கோயில் திருவிழாவில், எருது விடும் விழா நடந்தது.

குஜிலியம்பாறை ஒன்றியம், ஜக்கம்மநாயக்கன்பட்டியில் சுயம்பு கரட்டுக்கோட்டை பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசியில் 3 நாட்கள் திருவிழாநடைபெறும். இதில் குதிரை துளிர்த்தல், கரகம் பாலித்தல், தேவராட்டம், ஒயிலாட்டத்தை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கொழுக்கட்டை படைத்தல், எருது சந்திப்பு நிகழ்சிகள் நடந்தன. எருது விடும் நிகழ்சியில் திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட கோயில் காளைகள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து 2 கி.மீ., தூரமுள்ள காட்டுப்பகுதிக்கு ஓட்டிச்சென்றனர். பிறகு அங்கிருந்து குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து காளைகளையும் கோயிலை நோக்கி விரட்டிக்கொண்டு வந்தனர்.

அதில் திருச்சி,தோகமலை தாலுகா வாலியம்பட்டி மந்தையை சேர்ந்த காளை முதல் பரிசை வென்றது. காளைக்கு மாலை அணிவித்து எழுமிச்சை, மஞ்சள் பொடியை பரிசாக அளித்தனர். ஊர் பெரியவர் ஜக்கமநாயக்கர் தலைமையில் விழா நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்று எருது விழாவை ரசித்தனர்.

வடமதுரை: வையம்பட்டி அடுத்த பாலப்பட்டியில் பெருமாள்சாமி கொழுக்கட்டை கோயில் எருது ஓட்டத் திருவிழா 75 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது. கோயிலில் ராஜ கம்பளத்து நாயக்கர் மக்கள் தாங்கள் வளர்க்கும் எழுதுகள் இறந்த பின்னர் புதைக்கும் எருது குட்டை எனப்படும் பகுதியில் திருவிழா எடுத்து வழிபடுகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான எருது ஓட்ட நிகழ்ச்சிக்கு நூற்றுக்கணக்கில் வந்திருந்தனர். அவர்கள் வளர்க்கும் எருதுகளை 300 மீட்டர் தொலைவிற்கு கொண்டு சென்று, அங்கிருந்து வழிபாட்டு தலத்தை நோக்கி அவிழ்த்துவிட்டனர். கொத்து, கொம்பு பூத்தாண்டும் பகுதி என எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியில் விரிக்கப்பட்டிருக்கும் துண்டை தாண்டிச் சென்ற எருது மேல் மஞ்சள் பொடி தூவப்பட்டு முதலாவதாக வந்ததாக அடையாளம் காணப்பட்டது. முதலில் வந்த எருதுக்கு எலுமிச்சை பழம், மஞ்சளும் தந்து மரியாதை செய்யப்பட்டது. எருது விழா நிறைவாக தேவராட்டம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar