பதிவு செய்த நாள்
25
செப்
2018
11:09
திருவள்ளூர்:ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும், வேதாந்த தேசிகன் அவதார மஹோற்சவத்தில் பங்கேற்க, திருவள்ளூர், வீரராகவர், நாளை (செப்., 26ல்) இரவு, புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீபெரும்புதூர், வேதாந்த தேசிகன் அவதார மஹோற்சவம், 12ம் தேதி துவங்கியது. இதில், கடைசி நாளான, 27ம் தேதி, திருவள்ளூர் வீரராகவர், ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளுகிறார்.
இதையடுத்து, நாளை (செப்., 26ல்), இரவு, 10:00 மணிக்கு, உற்சவர் வீரராகவர், திருவள்ளூரி லிருந்து புறப்பட்டு, 27ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு, ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளுவார். அங்கு பூஜைகள், திருமஞ்சனம், வீதி புறப்பாடு முடிந்து, அன்று, இரவு, 10:00 மணிக்கு, புறப்பட்டு, 28ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் வளாகத்திற்கு வந்தடைவார் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.