கண்டாச்சிபுரம் சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2018 11:09
கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், நேற்று (செப்., 24ல்) காலை சோமவார பூஜைகள் நடைபெற்றன. காலை 11:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாம பூஜையும், அதனைத்தொடர்ந்து உச்சிகால பூஜையில், பக்தர்கள் பங்கு பெற்ற வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.