பதிவு செய்த நாள்
25
செப்
2018
11:09
வாழப்பாடி: வாழப்பாடி, தம்மம்பட்டி சாலையில், பழமை வாய்ந்த காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ராகுகால பூஜை உள்ளிட்ட உற்சவ காலங்களில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சாமி கும்பிட வருவர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், பராமரிப்பில்லாததால், கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், ஆகம விதிப்படி கருவறை கோபுரம், ராஜகோபுரம், மண்டபம் என எதுவுமில்லாத நிலை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. எனவே, கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறை முன் வர வேண்டும்.